Thursday, 14 April 2016

திரைக்கதை டிப்ஸ் - #3


இந்தமுறை ஒரு கதாபாத்திரத்தை எப்படி சுவாரஸ்யமாக அமைக்கலாம் என பார்க்கலாம்…

சினிமாவில் மட்டும் தான் , மக்கள் காசு கொடுத்து உள்ளே வந்து தான் நினைத்தது எதுவும் நடக்கக்கூடாது என ஆசைப்படுவார்கள்… அவர்கள் நினைத்த எல்லாம் நடந்தால் “ யூகிக்க கூடிய திருப்பம் , அடுத்ததை குழந்தை கூட சொல்லி விடும்” என விமர்சனங்கள் பறக்கும்…

இதை தவிர்க்க , ஒரு சீனை முற்றிலும் மாறுபட்ட ரீதியில் எடுக்க வேண்டும். அதிலும் முக்கியமாக அந்த கதாபாத்திரம் , இயல்பு நிலையில் இருந்து சற்றே விலகி இருந்தால் ( கவனம் : லாஜிக் பார்த்து ) பார்ப்பவர்களுக்கு வித்தியாசமான அனுபவமாக இருக்கும்.. சீக்கிரம் படத்தில் ஒன்றி விடுவார்கள்..

உதாரணமாக , கொம்பன் படத்தில் வந்த கார்த்திக்கும் , பருத்திவீரன் படத்தில் வந்த கார்த்திக்கும் ஏறத்தாழ ஒரேமாதிரி குணாதிசயம் இருக்கும்.  அவர்கள் வாழ்ந்த சூழ்நிலைக்கு ஏற்ப அவர்கள் கதாபாத்திரம் படைக்கபட்டிருக்கும்.. அதற்கு நிறைய  பில்ட்அப் சீன் தேவை.. அதுவே மெட்ராஸ் பட காளி யாக வந்த கார்த்திக் எப்படி ? மிக சாதாரணமாக ஒரு பாடலின் நடுவே என்ட்ரி கொடுப்பார்.. ஆனாலும் மறக்க முடியவில்லை தானே…!! அந்த கதாபாத்திர வடிவமைப்பு அப்படி.. நல்ல ரிச்சான பையன் போன்ற தோற்றம்… ஆனால் பேசுவதோ ‘ சும்மா நேத்துக்கு சுவரயே பாத்துகினு கீர ?’என்று… முரண்பாடு இருந்ததால் நம்மை அறியாமலும் ஒன்ற முடிந்தது…

அதேபோல் ஜோக்கர்… !!! குழந்தைகள் ரசிக்கும்படியாக முகத்தில் வர்ணம் பூசியபடி வித்தியாசமான உடல்மொழியோடு ஒரு கதாபாத்திரம்… அவன் சைக்கோதனமாக கொலை செய்யும்போது அதிர்ச்சி ஏற்படுகிறது.. சரி , அவன் கெட்டவன் என நினைக்கும் போது , அவன் பேசும் வசனங்கள் அனைத்தும் தத்துவங்களாக இருப்பது மேலும் அதிர்ச்சி… இப்படி ஆடியன்ஸ் எதிர்பார்த்ததை கிளிஷேவாக கொடுக்காமல் வித்தியாசம் காட்டியதால் ஜோக்கர் அழிக்கமுடியாத கதாபாத்திரம் ஆகிவிட்டது…

உங்கள் திரைக்கதையிலும் ஏதேனும் ஒரு கதாபாத்திரமாவது இப்படி அமைப்பது , ஆடியன்ஸிற்க்கு ஒரு ஆர்வத்தை ஏற்படுத்தும்.

Wednesday, 13 April 2016

திரைக்கதை டிப்ஸ் #2


புதிதாக திரைக்கதை எழுதுபவர்களின் பெரும்பாலான சாய்ஸ் , திரில்லர் டைப் தான்.. அல்லது காமெடி , காதல்... நாம் பொதுவாக செய்யும் தவறு , கதாபாத்திரங்களுக்கு பிண்ணனி , அழுத்தத்தை உருவாக்காமல் விட்டுவிடுவது.. அதாவது படம் தொடங்கி பத்தாவது நிமிடத்தில் ஆடியன்ஸ் , முக்கிய கதாபாத்திரத்தோடு ஒன்றி விட வேண்டும். அது அழுதால் இவர்களும் அழ வேண்டும்... அப்படி...

இங்குதான் பலரும் தடுமாறும் கட்டம்... உணர்வுபூர்வமாக எழுதாமல் , கடனே என்று ஒரு காதல் , மோதலை அமைப்பது.. இதனால் ஆடியன்ஸ் படத்தோடு  ஒன்றாமல் செல்போனை பார்க்க வைத்துவிடுகிறோம்..

இதனை தவிர்க்க , இதுவரை நீங்கள் பார்த்த கேட்ட சம்பவங்களில் இருந்து உணர்வுபூர்வமான முடிச்சுகளை  அமையுங்கள்.. கவனம் .. அது உங்களுக்கு மட்டும் அல்ல , பல பேரும் வாழ்க்கையில் சந்தித்த பிரச்சினைகளாக இருப்பது அவசியம்..

உதாரணம் :-

1. ஒரு கப்பல் , பனிபாறையில் மோதி மூழ்குகிறது. ஹீரோ தப்பிகிறான் என்பது பழசு.. ஏழை இளைஞன் , நிச்சயிக்கப்பட்ட பணக்கார ஹீரோயினை காதலிக்கிறான். காதல் கைகூடும் போது கப்பல் மூழ்கி காதலன் இறக்கிறான்.. இது உணர்வுபூர்வமாக டச் செய்யும். (Titanic)

2. டைனோசர் உயித்தெழுவது , தட்டையான திரைக்கதை. சிறுவர்களை வெறுக்கும் மனிதனும் , சிறுவர்களும் டினோசர்களிடம் மாட்டி தப்பிப்பது புதுசு.( jurassic park -1 )

3. பண்டோரா கிரகத்தின் மீது மனிதர் படையெடுப்பு , தட்டை... மனிதனாக , அவர்களுக்கு எதிரணியிடமும் நாவியாக ஒரு காதலனாகவும் இருப்பவன்... புதுசு..( avatar )

இன்னும் பல உண்டு... ஒரு மூன்றாவது நபராக நினைத்துக்கொண்டு உங்கள் திரைக்கதையை படியுங்கள்.. இப்போது உங்களை நீங்களே கேளுங்கள் .. இதில் உணர்வுபூர்வமான முடிச்சு உண்டா ?

தொடரும்...

Monday, 11 April 2016

திரைக்கதை டிப்ஸ் - #1

இந்த பதிவில் , துணை கதாபாத்திர வடிவமைப்பை பற்றி பார்க்கலாம்.

நாம் துப்பறியும் கதையோ , காதல் கதையோ எதுவாயினும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தை உருவாக்கி இருப்போம். ஆடியன்ஸின் கவனம் , அந்த முக்கிய கதாபாத்திரத்தில் தான் இருக்கும்.. திடீரென அந்த கதாபாத்திரம் எதாவது சிக்கலான முடிச்சுக்கு விளக்கம் அளிக்கும்போதோ அல்லது முக்கியமான விஷயத்தை சொல்லும் போதோ ஆடியன்ஸிற்க்கு குழப்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளது…

அதாவது , எப்படி அந்த கதாபாத்திரம் சரியான முடிவு எடுத்தது என்று … அதை தவிர்க்க அந்த முக்கிய கதாபாத்திரத்துடன் ஒரு துணை கதாபாத்திரம் உருவாக்கப்படும்.. இந்த துணை கதாபாத்திரம் எதற்கெடுத்தாலும் கேள்வி கேட்கும் தன்மைகொண்டதாக இருக்கும்… ஆடியன்ஸ் மனதில் இருக்கும் சந்தேகங்கள் , இந்த துணை கதாபாத்திரம் வாயிலாக கேட்கப்பட்டு முக்கிய கதாபாத்திரம் வாயிலாக பதில் அளிக்கப்படும். இதனால் ஆடியன்ஸிற்க்கு தெளிவு ஏற்படும்... இதை அதிகமாக வைத்தால் ‘ ஓவர் டோஸ்’ ஆகிவிடும் ஆபத்து உண்டு… தேவையான இடத்தில் பயன்படுத்துவது நல்லது.

அடுத்த பதிவில் சுவாரஸ்யமான கதாபாத்திரம் அமைப்பது பற்றி பார்க்கலாம்

தொடரும்….