Tuesday, 2 June 2015

அமெரிக்க டூ சைதாப்பேட்டை : பாகம் 3

பாகம் ஒன்று

பாகம் இரண்டம்

பாகம் - 3

சற்று திடுக்கிட்டு தான் போனாள் கேத்ரின். . யாருக்கு தான் இருக்காது ? முன்பின் தெரியாத ஊரில் தன் கண்களுக்காக ஒரு கும்பல் துரத்துகிறது என்றால். ... அவளது பயத்தை பசி வென்றதால் , பயத்திலேயே ரோட்டுகடை சாப்பாடை சாப்பிட்டு கொண்டிறுந்தாள்....

"எனக்கு என்னவோ , உன்ன யாரோ கண்கானிக்குறாங்க னு நினைக்கிறேன்" என்று சொல்லியவாறே கையை கழுவி கொண்டிருந்தான் குமார். .. இரவு நேரமாதலாள் , அதிவேகத்தில் ஒரு கார் இவர்கள் இருக்கும் திசையை நோக்கி வருவதை கவனித்தான். . சரேலென ஏதோ பொறிதட்டியது போல கேத்ரினை இழுத்து கொண்டு ஓடினான்
.. பாவம்.. பசியிலிருந்த கேத்ரின் தட்டை கீழே போட்டு விட்டு அவனுடன் ஓடினாள். .. கடைக்காரன் "டேய்ய். .. பணம்... பணம் குடுத்துட்டு போ டா " என கத்தியது அவர்கள் காதில் விழுந்ததோ என்னவோ... அதற்குள் சாலை ஓரமாக ஒரு புதரில் மறைந்து கடையை கண்காணித்தனர். ..

கடையோரம் நிறுத்திய காரில் இருந்து திமுதிமுவென ரவுடிகள் இறங்கினர். ..

"டேய்... இந்த பக்கம் ரெண்டு பேரு வந்தாங்களா ?"

" ஆமா எசமான் ... பணம் குடுக்காம ஓடிட்டாங்க " பயந்த படி சொன்னான் கடைக்காரன். ..

"டேய். .. இந்த இடம் புல்லா தேடுங்கடா.. அதுங்க இங்க தான் இருக்கும் "

ரவுடிகள் அந்த இடத்தை அலசி ஆராய்ந்தனர்... ஒருவன் குமார்,  கேத்ரின் இருந்த புதரின் அருகே வந்து மொபைளில் இருந்த டார்ச் ஐ அடித்து பார்த்தான். . பழைய மாடல் மொபைல் ஆதலால் வெளிச்சம் அவ்வளவாக இல்லை. . அவர்கள் இருந்தது தெரியாமல் திரும்பி விட்டான். ..

அந்த முரடனுக்கு ஒரே குழப்பம். .. போனை எடுத்து யாருக்கோ டயல் அடித்தான் அவசரமாக. ..

"ஹலோ.... சார்..?"

(--------)எதிர்முனை

"அதெல்லாம் இல்லை சார். .நானெல்லாம் மாட்டுவனா ? பிரச்சினை அதில்ல சார். . நீங்க சொன்ன இடம் கரெக்டா சார் ? "

(--------)எதிர்முனை

"ஆனா .. அவங்க இங்க இல்ல. . நல்லா தேடி பாத்துட்டோம் "

(-------)எதிர்முனை

"ம்ம்ம்ம். .. சரி சார். . அங்க போய் வெயிட் பண்றோம் "

( call Ended. ...)

இப்போது கண்களில் நரித்தனம் மின்ன , அந்த முரடன் , தன் ஆட்களை ஏற்றி கொண்டு அந்த இடத்தை விட்டு கிளம்பினான். ..

---/-----/-----/---/

தன்னை சுற்றி ஏதோ ஒரு சதிவலை இருகுவதை கண்டாள் கேத்ரின். .. பயத்துடன் குமாரை பார்த்து கொண்டிருந்தாள். . குமார் ஏதோ சிந்தித்து கொண்டிருந்தான். . திடீரென அவளிடம் திரும்பி , " நீ ... இந்த ரவுடிகளை எப்போலாம் பார்த்த ? கொஞ்சம் சொல்லு.."

சுருக்கமாக எடுத்துரைத்தாள் கேத்ரின். . இப்போது குமார் தெளிவடைந்தான்..

"உடனே உன்னுடைய மொபைல் பேட்டரி ய கழட்டு. .. சிம் கார்டை உடைச்சு போடு .. சீக்கிரம் "

" ஏன்..?"

" இவ்ளோ நேரம் இத வச்சு தான் நம்ம இடத்தை கண்டுபிடிச்சிருக்காங்க.. சீக்கிரம் உடை.."

அவன் சொன்னது போலவே உடைத்தாள்.. "நீ எப்படி சொல்ற ? "

" உன்னை கண்கானிக்குற அந்த ஆள " X " னு வச்சிப்போம்.. அவன் , நீ உங்க ஊர்ல அதாவது நியூ ஜெர்சி ல இருக்குற வரைக்கும் கண்கானிச்சிருக்கான்.. நீ பிளைட் ஏறின பிறகு , உன் மொபைல்  flight mode ல இருந்ததால ஏதும் பண்ண முடியல.. நீ எங்க ஊருக்கு வந்ததும் , திரும்ப அவன் கண்கானிப்புல இருந்த.. அப்போ தான் உன்ன கொல்ல லாரி ல வந்து இடிச்சிருக்காங்க.. தெய்வதீனமா நீ தப்பிச்சிட்ட... ஆனா உன்னுடைய மொபைல் பேட்டரி கழண்டு விழுந்திடுச்சி... so , திரும்பவும் அவனோட தொடர்பு கட் ஆகிடிச்சி. . அதனால தான் நீ யாரோட இடைஞ்சலும் இல்லாம ஒரு ஹோட்டலுக்கு போயி ரூம் புக் பண்ணிருக்க.. அங்க நீ பண்ண தப்பு , திரும்பவும் மொபைல ஸ்விட்ச் ஆன் பண்ணது... திரும்பவும் உன்னை அந்த " X " கண்டுபிடிச்சி , ஆட்களை அனுப்பிட்டான்.. இப்போ வரைக்கும் நாம போற இடத்துல கரெக்டா வரானுங்க... இப்போ புரியுதா ? "

ஆபத்து பலமடங்கு இருப்பது மட்டும் தெரிந்து , புரிந்தது போல தலை அசைத்தாள்..

"சரி குமார். . நான் என்னுடைய அப்பா ரிச்சர்ட் இறந்த இடத்திற்கு போகனும் .. உதவரியா ? "

சந்தோஷமா தலை அதைத்தான். . அதை ஆமோதிப்பது போல அவன் போன் சிணுங்கியது. ..

"ஹலோ "

" டேய்ய். . நாயே. .!! உனக்கு வேலை வாங்கி தர , என்னோட வேலைய விட்டு வந்தேன்.. அம்போனு விட்டுட்டு எங்கடா போன.? " கோபத்தில் கொப்பளித்தான் ஜகா. .

" மச்சி. .. என்னென்னமோ நடந்திடுச்சிடா " நடந்ததை கூறினான் குமார். .

" டேய்... தேவை இல்லாத வேலை டா... உங்க அம்மா , இந்த மாசம் சம்பளம் வரும் னு இருக்காங்க .. உனக்கு வேலை போனது கூட தெரியாது டா அவங்களுக்கு.."

" மச்சி. . எனக்கு புரியுது டா.. பாவம். . ஒரு பொண்ணோட உயிர் பிரச்சினை. . அதான். .."

" டேய். .. என்னடா சொல்ற. . வேணாம் டா... டேஞ்சர் "

" பாத்துக்கலாம் மச்சி. . "

பின்பு .. கேத்ரினை கூட்டி கொண்டு , அவள் குறிப்பிட்ட ஹோட்டலை அடைந்தனர். .. ஹோட்டலின் 7 வது மாடியில் தான் தீ விபத்து நடந்தது. . அவளது அப்பா இறந்த இடம்.. இரவு நேரமாதலாள் செக்யூரிட்டி சுறுசுறுப்பாக இயங்கி கொண்டிருந்தனர். . எந்த வித அடையாளமும் இல்லாமல் உள்ளே செல்வது சாத்தியமில்லை. .பின்பக்க பைப்பை பிடித்தவாறே முதல் மாடி ஏறினர்.. பின்னர் லிப்டில் 7 வது மாடிக்கு சென்றனர். . அங்கு தன் தந்தை தங்கியிருந்த அறையை தேடினர்..

" POLICE LINE. .. DON'T CROSS "  மஞ்சள் நிற டேப் அவர்களை எதிர்த்தது. .. குமாரும் கேத்ரினும் சுற்றுமுற்றும் பார்த்தனர்....

யாருமில்லை. ..

உள்ளே நுழைந்து , எல்லா இடத்திலும் தேடினர்.. மொத்தமும் தீயின் நாக்கு பட்டு கருகி இருந்தது... கேத்ரின் அப்படியே நிலைதடுமாறி உட்கார்ந்தாள்...

" இங்க தான் என்னோட அப்பா எரிஞ்சு செத்தாருல்ல..." அடக்கமாட்டாமல் அழுதால். .

" அழாதே. .. பிளீஸ். . முடிஞ்சத பத்தி கவலைபடாத. . நடக்க போறத பாரு.." ஆறுதலாக அவளை தூக்கி நிறுத்தினான் குமார் ...

கேத்ரினும் , ஒரு பெரிய பெட்டியின் மீது தாங்கி நின்றால். .. திடீரென. ..

அவள் கை வைத்திருந்த இடத்தில் பச்சை நிற ஒளி அடித்தது ... என்னவென்று உற்று கவனித்தாள்.. ஒரு சிகப்பு நிற ஒளி கீற்றாக பாய்ந்தது. .

சரேலென அந்த பெட்டி திறந்தது.. உள்ளே நெருப்பு படாமல் , புதிதாக இருந்தது.. அதன் உள்ளே இருந்ததை எடுத்து பார்த்தாள் கேத்ரின். ..

" Oh my god..."

அதை கீழே போட்டு விட்டு , குமாரை நோக்கி ஓடினாள். .. அந்த பெட்டியினுள்.....

தொடர்ச்சி அடுத்த பாகத்தில். ..

( அடுத்த பாகத்தில் நிறைவடையும் )

No comments:

Post a Comment